மக்களவைத் தேர்தல் விரைவில் வரவுள்ள நிலையில் கூட்டணியை வலுப்படுத்த அரசியல் கட்சிகள் மும்முரம் காட்டி வருகின்றன. இந்த நிலையில் திமுக கூட்டணிக்கு மேலும் ஒரு கட்சியாக ஆதித்தமிழர் ஜனநாயக பேரவை ஆதரவளிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கும் அருந்ததியர் சமூகத்துக்கு 6 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என திமுக அரசுக்கு கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.