தேர்தல் நடத்தை விதியை மீறியதாக ஈரோடு மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஈரோட்டில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 161 மூட்டைகளில் இருந்த 24,150 சேலைகளை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக தேர்தல் அதிகாரி அளித்த புகாரின் அடிப்படையில் அசோக்குமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது