மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. சின்னம் வழங்குவது தொடர்பாக இன்று காலை 9 மணிக்குள் முடிவெடுக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், குறைந்தபட்சம் 2 தொகுதிகளில் போட்டியிட வேண்டும். ஆனால் மதிமுக ஒரு தொகுதியில் (திமுக கூட்டணி) போட்டியிடுவதால், பம்பரம் சின்னத்தை ஒதுக்க முடியாது என தேர்தல் ஆணையம் பதிலளித்துள்ளது.