எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி டெல்லி மாநில அரசின் அதிகாரத்தை குறைக்கும் மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனத்தில் மாநில அரசின் அதிகாரத்தை குறைத்து, துணை நிலை ஆளுநருக்கு அதிகாரத்தை வழங்கும் வகையில் புதிய மசோதாவை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது. ஊழலை ஒழிக்கவே இந்த சட்டத்தை திருத்த மசோதா கொண்டுவரப்பட்டதாக அமித்ஷா இதற்கு விளக்கம் கொடுத்துள்ளார்.