ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே ஆற்றில் மூழ்கி 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கொடுமுடி காசிபாளையம் காவிரி ஆற்றில் கோவில் விழாவுக்கு புனித நீர் எடுக்க முயன்றபோது நீரில் மூழ்கி கொந்தாளம் புதூரை சேர்ந்த ஜெகதீஸ்(18), சௌதரி(14), குப்புராஜ் (17) ஆகிய 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் ஒருவரின் சடலம் மீட்கப்பட்ட நிலையில் மற்ற 2 பேரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது