ஞானவாபி மசூதியில் அகழாய்வு நடத்த வேண்டும் என சில பெண்கள் தொடர்ந்த வழக்கில் தொல்லியல்துறை ஆய்வு செய்ய அனுமதி அளித்து அலகாபாத் ஐகோர்ட் பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது. மசூதி கோயிலை இடித்து கட்டப்பட்டிருப்பதால், அதை மீண்டும் இந்துக்களிடம் வழிபாட்டுக்காக ஒப்படைக்க கீழமை நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து இஸ்லாமிய அமைப்பு தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து, அகழாய்வு நடத்த ஐகோர்ட் அனுமதியளித்துள்ளது.