தமிழகம் முழுவதும் இன்று நடைபெறும் போக்குவரத்து வேலை நிறுத்தத்தில் தொமுச, ஐஎன்டியுசி தொழிற்சங்கத்தினர் பங்கேற்கவில்லை. பொங்கல் பண்டிகை நெருங்குவதால், மக்கள் பாதிக்கக் கூடாது என்பதால் ஸ்டிரைக்கில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது. அதேசமயம் சி.ஐ.டி.யு. உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பேருந்துகள் இயங்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.