இந்தியாவை உலுக்கிய பில்கிஸ் பானு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் 11 குற்றவாளிகளை விடுதலை செய்தது செல்லாது என்று உச்சநீதிமன்றம் அதிரடியான தீர்ப்பை அளித்துள்ளது. ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் 11 பேரை கடந்தாண்டு முன்கூட்டியே குஜராத் மாநில அரசு விடுதலை செய்தது. இதை எதிர்த்து பில்கிஸ் பானு தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில், அனைவரின் விடுதலையை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது.