தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அண்மையில் நடைபெற்ற 12 மற்றும் பத்தாம் வகுப்பு பொது தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த பாராட்டுக்கள், மற்றவர்கள் தன்னம்பிக்கையுடன் மீண்டும் முயற்சி செய்து வெற்றி பெற வாழ்த்துக்கள் என்று தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் கூறியுள்ளார்.

அனைவரும் இனி தத்தம் உயர்கல்வி இலக்குகளுடன் வாழ்வின் பல்வேறு துறை சார்ந்த வெற்றிகளை குவித்து வருங்கால சமூகத்தின் சாதனை சிற்பிகளாக வளம் வர இதயபூர்வமாக வாழ்த்துகிறேன் எனவும் விரைவில் நாம் சந்திப்போம் என்றும் விஜய் கூறியுள்ளார். கடந்த வருடம் பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை விஜய் சந்தித்த நிலையில் இந்த வருடமும் அது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதால் மாணவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.