சென்னையில் செந்தில்குமார் என்பவர், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள் தன்னுடைய அக்காவை பார்ப்பதற்காக நேற்று அதிகாலை காரில் சென்றுள்ளார். அப்போது அண்ணா சாலை ஸ்பென்சர் சிக்னல் அருகே போலீசார் அவருடைய வாகனத்தை நிறுத்தி அவரிடம் மது போதை சோதனை செய்துள்ளனர். அப்போது அவர் அளவுக்கு அதிகமாக மது அருந்தி இருந்தது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து உதவி ஆய்வாளர் சாலமோன், செந்தில்குமாரை ஒருமையில் திட்டியுள்ளார். இதனால் ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த செந்தில்குமார் உதவி ஆய்வாளரை கன்னத்தில் பளார் என அறைந்துள்ளார். இதனைத் தொடர்ந்து உதவி ஆய்வாளர் அளித்த புகாரின் பேரில் செந்தில்குமார் கைது செய்யப்பட்டுள்ளார்.