தமிழகத்தில் பொதுவாக ஒவ்வொரு பண்டிகை நாட்களிலும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவது வழக்கம். மக்கள் அனைவரும் தங்கள் சொந்த ஊர் சென்று திரும்ப ஏதுவாக முக்கிய பண்டிகை காலங்களில் சிறப்பு ரயில்கள் மற்றும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அவ்வகையில் ஜனவரி 15 ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட இருப்பதால் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது சிறப்பு ரயில்கள் குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது.

அதன்படி தாம்பரத்தில் இருந்து திருநெல்வேலிக்கு கூடுதல் சிறப்பு ரயிலும், கோவை – திண்டுக்கல், தாம்பரம் – நாகர்கோவில், தாம்பரம் – கொச்சுவேலிக்கு சிறப்பு ரயில்களும் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.