புதுச்சேரி சம்பவத்தை போன்று தமிழகத்திலும் அதிர வைக்கும் கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. தருமபுரி அருகே மீட்டாரெட்டிஅள்ளி பகுதியில் நேற்று காணாமல் போன சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் நடத்திய விசாரணையில், தனியாக இருந்த சிறுவனுக்கு இளைஞர் இளங்கோ பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அப்போது சிறுவன் கத்தியதால், கிணற்றில் தள்ளிவிட்டு கொன்றது அம்பலமாகியுள்ளது.