தமிழகத்தில் கனமழையால் அடுத்தடுத்து உயிரிழப்பு செய்தி வந்து கொண்டே இருக்கிறது. இந்த நிலையில் நெல்லை டவுன் கல்லணை பள்ளி வளாக பேரிடர் மீட்பு முகாமில் தங்கி இருந்து ஏற்று மதியம் வெளியில் சென்ற ஒருவர் டவுன் அருணகிரி தியேட்டர் அருகே சடலமாகவும், நெல்லை பேருந்து நிலையம் முன்பு வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த முதியவர் உடல் சடலமாகவும் மீட்கப்பட்டுள்ளன. இந்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி ஒட்டுமொத்த தமிழக மக்களின் நெஞ்சை உலுக்கியுள்ளது.