தமிழகத்தில் பெய்த பேய் மழை சற்று ஓய்ந்த நிலையில் இன்று கன மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மீண்டும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மக்கள் கலக்கமடைந்துள்ளனர். இந்த மழையால் அந்த அளவிற்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்படாது என்பதால் கவலை வேண்டாம். மேலும் வளிமண்டல சுழற்சி வலுவிழந்ததால் நாளை முதல் அடுத்த நான்கு நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.