தென் மாவட்டங்களை வரலாறு காணாத மழையால் மூழ்கடித்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி அரபிக் கடலை நோக்கி நகரத் தொடங்கியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கடந்த மூன்று நாட்களாக தென் மாவட்டங்களில் பெய்த கனமழையால் மக்கள் வெள்ளத்தில் தத்தளித்துக் கொண்டிருக்கின்றனர். இதனைத் தொடர்ந்து அரசு தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டு வரும் நிலையில் இன்று வேதாரண்யம் மற்றும் கொடிய கரை முதல் ராமேஸ்வரம் வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. தென் மாவட்டங்களில் இனி முக்கிய பணியாக நிவாரணத்தை தொடரலாம் எனவும் தமிழக அரசுக்கு ஆலோசனை அளிக்கப்பட்டுள்ளது.