நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கனமழை காரணமாக சென்னை மற்றும் குருவாயூர் விரைவு ரயில் பாதையில் நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை எழும்பூரில் இருந்து குருவாயூர் சென்ற விரைவு ரயில் திருச்சியில் நிறுத்தப்பட்டுள்ளது. குருவாயூரிலிருந்து சென்னை எழும்பூர் வரை செல்லும் விரைவு ரயில் நாகர்கோவிலில் நிறுத்தப்பட்டுள்ளது.

அதனைப் போலவே தூத்துக்குடி மற்றும் வெள்ளை ஆகிய மாவட்டங்கள் வழியாக இயக்கப்படும் சுமார் 23 விரைவு ரயில்கள் ரத்து செய்யப்படுவதாகவும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இரண்டு மாவட்டங்களிலும் கன மழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக சில ரயில்கள் திண்டுக்கல்லில் நிறுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நெல்லையில் இருந்து புறப்படும் ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது