பொன்முடியை விடுவித்த தீர்ப்பை ஹை கோர்ட் ரத்து செய்தது. பொன் முடியை விடுவித்த சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. வருமானத்திற்கு அதிகமாக 1.75 கோடி சொத்து சேர்த்த வழக்கில் பொன்முடியை விடுவித்த தீர்ப்பு ரத்து. அமைச்சர் பொன்முடி 64.90% வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது நிரூபணம் ஆகி உள்ளது என தெரிவித்த ஹைகோர்ட்,  அமைச்சர் பொன்முடிக்கான தண்டனை விவரங்கள் டிசம்பர் 21-ம் தேதி அறிவிக்கப்படும் என்றும்,   டிசம்பர் 21 பொன்முடி அவரது மனைவி விசாலட்சுமி நேரில் அல்லது காணொளி மூலமாக ஆஜராக ஹை கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.