தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு பரிசு தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ள நிலையில் பொங்கல் பணம் ஆயிரம் ரூபாய் மற்றும் பரிசு தொகுப்பு வழங்குவதற்கான டோக்கன் ஜனவரி 7ஆம் தேதி நாளை முதல் ரேஷன் கடைகள் மூலம் விநியோகம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. டோக்கனியில் குறிப்பிடப்பட்ட நாள் மற்றும் நேரத்தில் ரேஷன் கடைகளில் பரிசுத் தொகை பெறலாம் என கூட்டுறவுத்துறை சற்று முன் அறிவித்துள்ளது.