நெல்லை மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் டிசம்பர் 20ஆம் தேதி நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தால் இரண்டு மாவட்டங்களிலும் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்த மின்சாரம் மற்றும் உணவு இல்லாமல் மக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ள நிலையில் நாளை இந்த இரண்டு மாவட்டங்களிலும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.