மிக்ஜாம் புயல், கனமழை பாதிப்பு எதிரொலியாக சென்னையை தொடர்ந்து மேலும் ஒரு மாவட்டத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழையால் சென்னைக்கு இணையாக திருவள்ளூர் மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், மாணவர்கள் பாதுகாப்பு நலன் கருதி அம்மாவட்டம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சில மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு வெளியாகவுள்ளது