சென்னையில்ஏற்பட்ட பெரும் கனமழை வெள்ளத்தால் சாலை முழுவதும் தண்ணீர் சூழ்ந்து காணப்படுகிறது. குடியிருப்பு பகுதிகளிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளதால், ஆங்காங்கே போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக சென்னை முழுவதும் பால் விநியோகம் முடங்கியுள்ளது. இதனால், மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்க அரசு தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகிறது