ஈரோடு கிழக்கு தொகுதியில் தமாகா போட்டியிடவில்லை; அதிமுக போட்டியிட உள்ளதாக தமிழ் மாநில காங்., தலைவர் ஜி.கே.வாசன் அதிகாரப்பூர்வமாக சற்றுமுன் அறிவித்துள்ளார். இடைத் தேர்தலில் அதிமுக போட்டியிட வேண்டும் என்று அக்கட்சி நிர்வாகிகள் விருப்பம் தெரிவித்தனர். தற்போதையை அரசியல் சூழல், எதிர்கால தேர்தல்களை கருத்தில் கொண்டு அதிமுகவின் முடிவை ஏற்றுக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.