தேனி தொகுதி எம்.பி ஓ.பி ரவீந்திரநாத் வெற்றி செல்லாது என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.2019 மக்களவைத் தேர்தலில் தேனி தொகுதியில் ஓ.பி ரவீந்திரநாத் வெற்றி பெற்றது செல்லாது என ஐகோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது. தேனியில் காங்கிரஸ் வேட்பாளர் இ.வி.கே.எஸ் இளங்கோவனை எதிர்த்து வெற்றி பெற்றிருந்தார் ரவீந்திரநாத். 2019 தேர்தலில் பெற்ற வெற்றி செல்லாது என வாக்காளர் மிலானி என்பவர் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எஸ் சுந்தர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். மேலும் ஓ.பி ரவீந்திரநாத் மேல்முறையீடு செய்ய 30 நாட்கள் அவகாசம் வழங்கியுள்ளார் நீதிபதி சுந்தர்..