கனமழையால் பாதிக்கப்பட்ட நெல்லை. தூத்துக்குடி, குமரி, தென்காசி ஆகிய மாவட்டங்கள் மெல்ல மெல்ல மீண்டு வருகின்றன. இந்த நிலையில், 4 மாவட்டங்களிலும் வெள்ள பாதிப்பு குறைந்த பகுதிகளில் உடனே ரேஷன் கடைகளை திறந்து, குடும்ப அட்டைதாரர்களுக்கு உணவுப்பொருட்களை வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. சில பகுதிகளில் இன்னும் ரேஷன் கடைகள் திறக்கவில்லை என புகார் எழுந்த நிலையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.