தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளை அரையாண்டு விடுமுறை முடிந்து ஜனவரி 2ஆம் தேதி திறக்கலாம் என்று தனியார் பள்ளிகளின் இயக்குநர் அறிவித்திருக்கிறார். மழை, வெள்ளம் என்று பல மாவட்டங்களில் இந்த ஆண்டு வழக்கத்தை விட அதிக விடுமுறை அளிக்கப்பட்டது. அதனை ஈடு செய்ய அரையாண்டு விடுமுறையில் பல பள்ளிகள் செயல்படுவதாக தகவல் கிடைத்தது. இதனை தடுப்பதற்காக அறிவிப்பாணையை வெளியிட்டிருக்கிறார் இயக்குநர்.