சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, அவர் வகித்து வந்த உயர் கல்வித்துறை பொறுப்பு கூடுதலாக அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு ஒதுக்கப்பட்டது. எனினும், பொன்முடியின் பெயர் இலாகா நீக்கப்பட்டு தமிழ்நாடு அரசின் இணையதளத்தில் அமைச்சர்கள் பட்டியலில் நீடித்து வருகிறது. ஏற்கெனவே, இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜியும் உள்ளது குறிப்பிடத்தக்கது.