சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபை வழிபாடு விவகாரத்தில் தீட்சிதர்கள் மீது விசாரணை மேற்கொண்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு உறுதியாக தெரிவித்துள்ளார். HRCE செயலியை அறிமுகப்படுத்தி பேசிய அவர், ‘பக்தர்களின் நலன்களுக்காக எடுக்க வேண்டிய நடவடிக்கைகளில் இருந்து ஒரு நாளும் பின்வாங்க போவதில்லை. அதற்குண்டான ஆதாரங்களை திரட்டி கொண்டிருக்கிறோம்’ என்றார்.