மேற்கு வங்கத்தின் ஒண்டா பகுதியில் ஏற்பட்ட ரயில் விபத்தில் 12 பெட்டிகள் தலைகுப்புற கவிழ்ந்தன. விபத்திற்கான காரணம் குறித்து இன்னும் கண்டறியப்படவில்லை. 2 சரக்கு ரயில்கள் ஒன்றோடு ஒன்று நேருக்கு நேர் மோதிக் கொண்டதாக தெரிகிறது. இதில் ரயில் இஞ்சின் உட்பட பெட்டிகள் உருகுலைந்து இருக்கின்றன. பயணிகள் ரயில் இப்படியான விபத்தில் சிக்கியிருந்தால் பலத்த உயிர்சேதம் ஏற்பட்டிருக்கும். ஓட்டுநர் காயங்களுடன் தப்பினார்