மதுரை கருவனூரில் கோயிலில் மரியாதை அளிப்பதில் ஏற்பட்ட மோதலில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ மற்றும் திமுக முக்கிய நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இருதரப்பு இடையே ஏற்பட்ட மோதலில் முன்னாள் எம்எல்ஏ பொன்னம்பலம், அவரது மகன்கள் உள்ளிட்ட 3 பேரும், மற்றொரு தரப்பில் திமுக கிளை செயலாளர் வேல்முருகன் செந்தமிழன், ராஜமோகன் உள்ளிட்ட 3 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.