சென்னை கோயம்பேட்டில் நேற்று ரூ. 70க்கு விற்கப்பட்ட தக்காளி விலை இன்று கிலோ ரூ.100 ஆக உயர்ந்துள்ளது. சென்னை புறநகர் பகுதிகளில் ரூ.110 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் பீன்ஸ் ஒரு கிலோ ரூ.120 எனவும் இஞ்சி ஒரு கிலோ ரூ.200 எனவும் விற்பனை செய்யப்படுகிறது. மழை காலம் முழுமையாக ஆரம்பிப்பதற்கு முன்பாகவே காய்கறி விலை உச்சம் தொட்டு வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது