சேலம் தொகுதி திமுக வேட்பாளர் செல்வகணபதியின் வேட்பு மனு பரிசீலனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. சேலம் மக்களவைத் தொகுதியில் இரண்டு இடங்களில் செல்வகணபதிக்கு வாக்குரிமை உள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. இதனால் இரட்டை வாக்குரிமை குறித்து விளக்கம் கொடுக்கும் வரை வேட்பு மனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்பால் திமுகவினர் இடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.