சென்னை – மதுரையை இணைக்கும் அதிவேக ரயிலான தேஜஸ், தாம்பரத்தில் நின்று செல்லும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. சென்னையில் இருந்து காலை 6 மணிக்கு புறப்படும் இந்த ரயில், திருச்சி, திண்டுக்கல் என இரண்டு நிறுத்தங்களில் மட்டும் நின்று 12.15 மணிக்கு மதுரையை சென்றடைந்து கொண்டிருந்தது. அதில் தற்போது மூன்றாவது நிறுத்தமாக தாம்பரம் சேர்க்கப்பட்டுள்ளது. வரும் 26 ஆம் தேதி முதல் தாம்பரத்தில், இரு மார்க்கத்திலும் தேஜஸ் ரயில் நின்று செல்லும் என்று ரயில்வே துறை அறிவித்துள்ளது.