தமிழகத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டை முன்வைத்து பாஜக பொருளாதார பிரிவு மாநில செயலாளர் கிருஷ்ணபிரபு ராஜினாமா செய்துள்ளார். கட்சியின் அடிப்படை உறுப்பினராக கூட இருக்க தகுதி இல்லாதவர்களுக்கு பணம் பெற்றுக் கொண்டு பதவி கொடுக்கப்படுகிறது. கட்சி உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகளிடம் அவசியம் இல்லாத காரணங்களுக்கு பணம் வசூலிக்கப்படுகிறது என குற்றம் சாட்டிய கிருஷ்ண பிரபு எந்த காலத்திலும் பாஜக வளராது என விமர்சித்துள்ளார். அவர் தற்போது பாஜகவில் இருந்து தனது பதவியை ராஜினாமா செய்துள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு கிளப்பியுள்ளது.