மத்திய அரசுடன் விவசாய சங்கங்கள் நடத்திய மூன்றாம் கட்ட பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. இதனை தொடர்ந்து விவசாயிகள் மீதான தாக்குதலை கண்டித்தும் பயிர் காப்பீட்டு திட்டம், கடன் நிவாரணம் மற்றும் மாதந்தோறும் குறைந்தபட்ச நிவாரணத் தொகை போன்ற விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசு உடனே நிறைவேற்ற வலியுறுத்தியும் பிப்ரவரி 16ஆம் தேதி இன்று தமிழக உட்பட நாடு தழுவிய பாரத் பந்த் நடைபெறுகிறது.