தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் பொது இடங்கள் மற்றும் மருத்துவமனைகளில் அனைவரும் முகம் கவசம் அணிய வேண்டும் என சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா வேகமாக பரவி வருவதால் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு இறுதி தேர்வை ஏப்ரல் 28ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

ஏற்கனவே பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு முடிவடைந்த நிலையில் கோடை விடுமுறை தொடங்கியுள்ளது. 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விரைவில் தேர்வு முடிவடைய உள்ள நிலையில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கும் ஏப்ரல் 20 ஆம் தேதி தேர்வு முடிவு அடைகிறது. இந்நிலையில் 1 முதல் 3 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 17 முதல் 21 வரையும், ஆறு முதல் ஒன்பதாம் வகுப்புக்கு ஏப்ரல் 10 முதல் 28ஆம் தேதிக்குள்ளும் இறுதி தேர்வை நடத்தி முடிக்க வேண்டும். 29ஆம் தேதி முதல் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.