தமிழகத்தில் புதிதாக 6 மருத்துவக் கல்லூரிகளை அமைக்க தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி அளித்துள்ளது. அதன் உத்தரவில் தென்காசி, அரக்கோணம், பெரம்பலூர், மயிலாடுதுறை, ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் ஆகிய ஆறு மாவட்டங்களில் கல்லூரிகள் தொடங்க அனுமதி வழங்கப்படுகிறது என கூறப்பட்டுள்ளது. அத்துடன் மத்திய அரசின் பங்களிப்புடன் அமைக்கப்படும் இந்த கல்லூரிகளுக்கான 23 ஏக்கர் நிலத்தை அடையாளம் காணவும் அறிவுறுத்தியுள்ளது.