தமிழகத்தில் உள்ள அனைத்து சிவாலயங்களிலும் வருகிற 18-ஆம் தேதி சிவராத்திரி மிக சிறப்பான முறையில் கொண்டாடப்படும். இந்நிலையில் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து சிவன் ஆலயங்களிலும் மகா சிவராத்திரி விழாவை சிறப்பான முறையில் கொண்டாடுவதற்கு இந்து அறநிலையத்துறை அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள், ஆன்மீக நிகழ்ச்சிகளை நடத்தவும், கலை நிகழ்ச்சிகளில் உள்ளூர் கலைஞர்களுக்கு முன்னுரிமை வழங்கவும் இந்து அறநிலையத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.