தமிழகத்தில் நேற்று (ஜன.22) ஒரேநாளில் அதிகமானோர் பத்திரப்பதிவு செய்ததால் அரசுக்கு ₹168.83 கோடி வருவாய் கிடைத்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. தை மாதம் பிறந்த நிலையில், பத்திரப்பதிவுகள் அதிகரித்துள்ளதால், கூடுதல் டோக்கன் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அந்தவகையில், நேற்று ஒரேநாளில் 21,004 ஆவணங்கள் பத்திரப்பதிவு செய்யப்பட்டதால் அரசுக்கு ₹168.83 கோடி வருவாய் கிடைத்துள்ளது.