தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இதற்கான வேட்பு மனு தாக்கல் இன்று பிற்பகல் 3 மணிக்கு நிறைவடைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து பூத் சிலிப் விநியோகம் ஏப்ரல் 1ஆம் தேதி தொடங்கப்பட்டு ஏப்ரல் 13ஆம் தேதிக்குள் விநியோகிக்கப்படும் என தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார். தேர்தல் தொடர்பான புகார்களை 1950 என்ற எண்ணில் தெரிவிக்கலாம் எனவும் கூறியுள்ளார்.