தமிழக அரசானது கடந்த செப்டம்பர் மாதம் தமிழகத்தில் உள்ள குடும்பத் தலைவிகளுக்கு ரூபாய் ஆயிரம் உரிமை தொகை வழங்கும் திட்டத்தை அமல்படுத்தியது.இதன் மூலமாக விண்ணப்பங்கள் பெறப்பட்டு முதல் கட்டமாக ஒரு கோடியே 6,52,000 பெண்கள் இதில் பயன் அடைந்தார்கள். அதன் பிறகு விண்ணப்பத்தில் உள்ள பிழைகள் நீக்கப்பட்டு மேல்முறையீடு செய்தவர்களையும் சேர்த்து இறுதியாக  ஒரு கோடியே 15 லட்சம் பெண்கள் பணத்தை பெற்று வருகிறார்கள்.

ஆனால் திட்டத்தில் விண்ணப்பித்து பலனடையாத பலரும் மேல்முறையீடு செய்வது குறித்து அரசன் அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். அந்த வகையில் தற்போது தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதால் அடுத்த கட்ட அறிவிப்பு குறித்து கவலையிலிருந்து வருகிறார்கள். இந்த நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விண்ணப்பித்து தகுதி பட்டியலுக்கு வந்து நிராகரிக்கப்பட்ட அனைவருக்கும் தேர்தலுக்குப் பிறகு கட்டாயம் உரிமை தொகை வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.