தமிழ்நாட்டுக்கு 15 நாட்களுக்கு காவிரியில் இருந்து வினாடிக்கு 5000 கன அடி நீர்  திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. எஸ்.கே.கல்தர் தலைமையில் டெல்லியில் நடந்த காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. காவிரி நதி நீர் பங்கீடு குறித்து தமிழகம், கர்நாடகா அரசு முன்வைத்த கோரிக்கை மனுக்கள் மீது, முடிவு எடுக்க காவிரி மேலாண்மை ஆணையம் இன்று டெல்லியில் கூடியது.