போதைப்பொருள் கடத்தல் வழக்கில்இயக்குநர் அமீருக்கு தொடர்புள்ளதாக NCB தலைவர் கியானேஷ்வர் சிங் தெரிவித்துள்ளார். போதைப்பொருள் கடத்தல் மூலம் கிடைத்த பணத்தை ஜாபர் சாதிக் திரைப்படங்களில் முதலீடு செய்துள்ளார். தமிழ், இந்தி சினிமா வட்டாரங்களில் பலருக்கு தொடர்பு உள்ளது. யார் யார் என்ற விவரங்களை தற்போது வெளியிட இயலாது. அமீர் உள்ளிட்டோரிடம் விரைவில் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளார்.