போதைப் பொருள் கடத்தல் மன்னன் ஜாஃபர் சாதிக் ராஜஸ்தான் மாநிலத்தின் தலைநகர் ஜெய்பூரில் கைதானதாக போலீஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. உணவு பொருள் என்ற பெயரில் ஆஸி., மலேசியா, நியூசிலாந்துக்கு ஜாஃபர் சாதிக் கடந்த 3 ஆண்டுகளில் 3,500 கிலோ சூடோபெட்ரைன் போதைப்பொருளை கடத்தியுள்ளார். இவருக்கு சர்வதேச கும்பலுடன் தொடர்பு இருப்பதாகவும் போலீஸ் தெரிவித்துள்ளது.,