மக்களவைத் தேர்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது. முதல்வர் ஸ்டாலின், காங்., பொதுச்செயலாளர் வேணுகோபால் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் 9, புதுவையில் ஒரு தொகுதி என மொத்தம் 10 தொகுதிகள் காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் எந்தெந்த தொகுதிகளில் காங்., போட்டி என்பது விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.