ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜியிடம் மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் நேரில் விசாரணை நடத்திய பின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, செந்தில் பாலாஜியின் தலை, காதுகளில் காயங்கள் உள்ளன. விசாரணைக்கு ஒத்துழைப்பு  அளித்தும், தன்னை கைது செய்தபோது அதிகாரிகள் கீழே தள்ளிவிட்டு மோசமாக நடத்தினர்  என செந்தில் பாலாஜி வாக்குமூலம் அளித்ததாக தெரிவித்தார்.