தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு மற்றும் தலைமை செயலகத்திலுள்ள அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதையடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்தனர். இதற்கிடையில் அவருக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டதை அடுத்து ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனிடையே செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் பரிந்துரை செய்து உள்ளனர்.

இந்நிலையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது “செந்தில் பாலாஜியை தனியார் மருத்துவமனையில் அனுமதிப்பது அவரது குடும்பத்தினர் தனிப்பட்ட விருப்பம். அதில் நாம் தலையிட முடியாது. ஜெயக்குமாரை கைது செய்தது ஏன் என்பதை அனைவரும் அறிவர்” என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.