தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு மற்றும் தலைமை செயலகத்திலுள்ள அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதையடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்தனர். இதற்கிடையில் அவருக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டதை அடுத்து ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனிடையே செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் பரிந்துரை செய்து உள்ளனர்.

இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள வீடியோவில் “திமுக காரர்களை சீண்டிப் பார்க்க வேண்டாம். எங்களுக்கு அனைத்து அரசியலும் தெரியும். தீவிரவாதியை போன்று அடைத்து வைத்து விசாரிக்க என்ன அவசியம் உள்ளது?. செந்தில் பாலாஜி கைது அப்பட்டமான அரசியல் பழிவாங்கும் செயல் ஆகும். அறிவிக்கப்படாத எமர்ஜென்சியில் நாடு இருக்கிறதா? என முதல்வர் ஸ்டாலின் வீடியோ வெளியிட்டு எச்சரித்துள்ளார்.