அமலாக்கத்துறை வழக்கில் கைதாகி தற்போது நெஞ்சு வலியால் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அமைச்சர் செந்தில் பாலாஜி சிகிச்சை பெற்று வருகின்றார். மருத்துவமனை முழுவதும் காவல்துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ளது. மேலும் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருப்பதால் அவரைப் பார்க்க வந்த அமைச்சர் சேகர்பாபு, கொரடா கோவி செழியன் ஆகியோருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும் நீதிமன்ற காவலை நிராகரிக்க கோரிய அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜிக்கு வருகின்ற ஜூன் 28ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.