அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சற்றுநேரத்திற்கு முன் இருதய அறுவை சிகிச்சை தொடங்கியுள்ளது. செந்தில் பாலாஜியின் இதயத்தில் 3 அடைப்புகள் இருப்பது சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டதால்,ஓமந்தூரார் மருத்துவமனையில் இருந்து காவிரி மருத்துவனைக்கு மாற்றப்பட்டார். முழு பரிசோதனைக்கு பிறகு இன்று அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை தொடங்கியது.