நடிகர் விஜய் தமிழகத்தில் நடந்து முடிந்த பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு நீலாங்கரையில் வைத்து ஊக்க தொகையை வழங்கினார். மேலும் அந்த நிகழ்ச்சியில் மாணவர்களிடையே பேசிய அவர் ஓட்டிற்கு பணம் வாங்க கூடாது என்றும் நம் விரலை வைத்து நம் கண்ணை குத்தி விடுவார்கள் என்றும் பேசி இருந்தார். மேலும் தான் அரசியலுக்கு வருவது குறித்து மறைமுகமாக பேசிய நிலையில் விஜய் சீக்கிரம் அரசியலுக்கு வருவார் அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவார் என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது

இந்நிலையில் ஓட்டுக்கு பணம் கொடுக்காமல் ஊழலை ஒழிக்கக் கூடிய கட்சியை தொடங்கப்போகிறேன் என யார் கூறினாலும், அதை பாஜக வரவேற்கும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “மக்கள் மன்றத்தில் எல்லோரும் போய் நிற்போம். மக்கள் யாரை ஏற்கிறார்களோ, அவர்கள் வரலாம். விஜய்யும் தாராளமாக வரட்டும். அதை தீயசக்திகள் தடுக்க நினைத்தால் தமிழக மக்கள் விடமாட்டார்கள்” என கூறினார்